Monday, January 2, 2012

தந்தையை விடுதலை செய்யுமாறு அபர்ணா பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை

தனது தந்தையான சரத் பொன்சேகாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது தந்தை கடந்த யுத்த வெற்றியின் போது பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகவும், இதனை கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு அபர்ணா பொண்சேகா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எப்படி இருந்த போதிலும் இந்த கடிதம் சரத் பொண்சேகா அல்லது அனோமா பொன்சேகா ஆகியோரின் அனுமதியுடன் முன்வைக்கப்பட்டதா ? இல்லையேல், அபர்ணா பொன்சேகா தனது சுய விருப்பின் பேரில் முன்வைத்ததா என்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com