Friday, January 13, 2012

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் மனைவியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.

கிறீஸ் மனிதன் சச்சரவுகள் நிலைகொண்டிருந்தபோது , திருக்கோயில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இவ்வார்பாட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு மீதும் வழக்குத் தொடர்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்திரநேரு அக்கரைப்பற்று நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, அரச எதிர்ப்பு கோஷங்களுக்கு மக்களை தூண்டியமை போன்ற குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. சந்திரநேரு சந்திரகாந்தன் தொடர்சியாக நீதிமன்றில் ஆஜராகாமையினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்திரநேருவின் பிணையாளியான அவரது தாயரை எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com