Tuesday, January 3, 2012

குற்றச்செயல்களை ஆராய புதிய நிலையமாம்.

இலங்கையில் முதல் முறையாக குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்கு மத்திய பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை தடுப்பதே இதன் நோக்கமாகும். கொழும்பு - 7 குற்ற புலனாய்வு தகவல் வலயத்தில் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் இப்பிரிவை ஆரம்பித்து வைத்தார்.

தினமும் கிடைக்கும் குற்றச் செயல்கள் தொடர்பாக தரவுகளை ஆராய்ந்து குற்றத்தின் தன்மை, அவற்றை தடுப்பதற்கான வழி வகைகள், தேவையான துரித ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பது உட்பட பல்வேறு விடயங்கள் இதன் ஊடாக முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் பிராந்திய மட்டத்திலும் இவ்வாறான பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com