Tuesday, January 3, 2012

யாழ் மாநாகர சபையின் உழியர்கள் 27 பேர் திடீர் வேலைநீக்கம்.

யாழ் மாநகர சபையின் ஆழும் கட்சி உறுப்பினர்களிடையே இடம்பெற்றுவரும் உட்கட்சி மோதல்களின் வெளிப்பாடாகவே இப்பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக மாநகர சபையின் ஆழும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

மேற்படி 27 பேரும் நேற்று முன்தினம் 1ம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மாநகர சபையில் பதில் கடமை மேற்பார்வையாளர்களாக சேவைக்கமர்த்தப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் மாநகர சபையின் உறுப்பினரும் ஈபிடிபி கட்சியிலிந்து விலக்கப்பட்டுள்ளவருமான மங்களநேசன் அவர்களின் சிபார்சின் பேரில் நியமனம் பெற்றிருந்தனர்.

தற்போது மங்களநேசனுக்கும் மேயருக்கும் முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவர்களை மாநகரசபையிலிருந்து அகற்றும் பணியில் மேயர் இறங்கியுள்ளதாக மங்களநேசன் தெரிவிக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com