Tuesday, January 3, 2012

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு இவ்வாண்டு நடைபெறுமென கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தனாயக தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கான உத்தியோகத்தர்கள் தெரிவு நிறைவடைந்துள்ளது. கட்சி யாப்பிற்கு ஏற்ப 2012 ஆம் ஆண்டிற்கான செயற்குழு தெரிவு செய்யப்பட வேண்டும். 2 சிரேஷ்ட உப தவிசாளர்கள், 3 உப தவிசாளர்கள், பிரதி செயலாளர் ஒருவர், 2 உதவி செயலாளர்கள், அத்துடன் மேலும் பல பதவிகளுக்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் 5 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆலோசனை குழு கூடவுள்ளது. ஆலோசனை குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப கட்சியிளன் செயற்குழுவினால் புதிய அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாதத்திற்குள் அதனை பூர்த்தி செய்வதே எமது நோக்கமாகும். பலவீனங்கள் குறைபாடுகள் பற்றி விவாதித்து விமர்சித்த வண்ணம் இப்பயணத்தை செல்ல முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com