Tuesday, January 3, 2012

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லையாம்!

மாளிகாவத்தை பகுதியில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எதுவும் இல்லையென பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். நீதிமன்றத்திற்கு அறிக்யொன்றை சமர்ப்பித்துள்ள மாளிகாவத்தை பொலிஸார் மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல தரப்புகளிலிருந்து விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தில் 18 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். மாளிகாவத்தை பகுதியில் நேற்றிரவு இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com