Monday, January 2, 2012

ஜே.வி.பி கிளரச்சிக் குழுவின் தலைவரின் மனைவி, பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

ஜே.வி.பியின் முன்னணி அரசியல் பிரமுகரும், கிளர்ச்சிக் குழுவின் தலைவருமான குமார் குணரத்தினத்தின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜே வி பியின் கிளர்ச்சிக்குழு சிரேஷ்ட உறுப்பினரான ஜி.குலரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் பெங்கொக்கிற்கு செல்ல முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான 'குமார மஹாத்தயா' என்பவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் பாங்கொங்கிற்கு செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருந்த போதும், அவர்கள் ஜே.வி.பியின் கிளர்ச்சிக்குழுவின் தலைவருமான குமார் குணரத்தினத்தின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன்னர் குமாரின், மனைவி பிள்ளைகள், அவுஸ்திரேலியாவிலிருந்தே வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com