Monday, January 2, 2012

ஜே.வி.பி உறுப்பினர்களுடன் புதிய கட்சி உருவாக்கம்

ஜே.வி.பியின் உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்கப் போவதாக அந்த முன்னணியின் கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து கிளர்ச்சிக்குழுவின் ஊடகப் பேச்சாளர் புபுது ஜயகொடி கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் உட்பட ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவில் இருந்து விலக்கப்பட்ட 9 உறுப்பினர்களும் இணைந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தாம் கட்சியில் இருந்து விலக்கப்பட்டாலும், பெரும்பான்மை ஆதரவு தமக்கிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com