Monday, January 2, 2012

மாணவர்கட்கு வாழ்நாள் முழுவதும் ஒரே சுட்டெண். புதிய திட்டம் அறிமுகமாகிறது.

பரீட்சை பெறுபேறு நெருக்கடிகளுக்கு நீண்டகால தீர்வினை வழங்கும் வகையில், பாடசாலை மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு பரீட்சை இலக்கத்தினை வழங்க, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தமது வாழ்நாள் பூராகவும் தோற்றும் சகல பரீட்சைகளுக்கும், ஒரே பரீட்சை இலக்கத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பில், பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

பிழையான பரீட்சை இலக்கத்தினை இணையதளத்தில் பதிவு செய்ததன் மூலம், தவறான பெறுபெறுகளை பெற்ற உயர்தர மாணவர்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளை கருத்திற்கொண்டே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது நிரந்தர இலக்கமொன்றை பரீட்சார்த்திகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், இவ்வாறான பிரச்சினைகள் நீங்குமென, பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com