Friday, January 27, 2012

மருத்துவ துறை குறித்த மூன்று நாள் பிராந்திய மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இலங்கை மருத்துவ சங்கம் யாழ்.மருத்துவ சங்கத்துடன் இணைந்து நடத்தும் மருத்துவ துறை குறித்த மூன்று நாள் பிராந்திய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இம் மூன்று நாள் மாநாடு ஆரம்பமானது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் எதிர்நோக்கும் சுகாதாரம் சார் சவால்களில் இருந்து முன்னோக்கி செல்லுதல் என்னும் தலைப்பில் இன்றைய முதலாவது நாளில் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சர் மைத்திபால சிறிசேன கலந்து கொண்டார்.

இங்கு மருத்துவ துறைசார் வல்லுனநர் தாம் எதிர்நோக்கும் துறைசார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

எதிர்வரும் இரண்டு நாட்களிலும் யாழ்.கொழும்பு மருத்துவ பீடங்களைச் சேர்ந்த துறைசார் வல்லுநனர்களும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இலங்கை மருத்துவ சங்க வல்லுநனர்களும் தொடர்ந்து கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் நடைபெற்றது.

நாளை இரண்டாம் நாளில் மூன்று பகுதிகளாக கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. யாழ். பொது நுர்லகத்திலும் ரில்கோ விடுதியிலும் பல்கலைக்கழகத்திலும் இவை நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com