Friday, January 27, 2012

சிங்களவர்கள் அழிக்கும் மனிதர்கள் என்ற எண்ணத்தை புலிகள் ஏற்படுத்தி இருந்தனராம்

சிங்களவர்கள் என்றால் அழிக்கும் மனிதர்கள் என்ற எண்ணத்தை பல காலங்களாக புலிகள் தமிழ் மக்களின் மனதில் பலவந்தமாக ஏற்படுத்தி இருந்தனர். அந்த எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்து தற்போது இல்லாமல் போயுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பிணைப்பானது சீன பெருஞ்சுவரை விட வலிமையானது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

வட மாகாண பாடசாலை மாணவர்களை வரவேற்பதற்காக கோட்டே ஸ்ரீஜயவர்தனபுர பாலிகா கல்லூரியில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலயே அமைச்சர் வீரவங்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்தமானது அனைவரது மனங்களில் சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையுமே ஏற்படுத்தும். நாம் நம்பிக்கை இழப்பானது மேற்குலக நாடுகளுக்கு சாதகமாக அமைந்து விடும். நாட்டில் மாத்திரமல்ல வீட்டில் கூட ஐக்கியம் இல்லாது போனால், அதனை அழிக்க வெளிசக்திகளுக்கு சாதகமான சந்தர்ப்பம் ஏற்பட்டு விடும் எனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com