Monday, January 30, 2012

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் காலையில் சம்பிரதாய பூர்வமாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.காலையில் இடம் பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பருத்தித்துறை நகரில் உள்ள பழைய பொலிஸ் நிலைய கட்டிடத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் சிரேஷ்ர பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா யாழ்.மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் ரி.இந்திரன் காங்கேசன் துறைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி பேராரா பருத்தித்துறை உதவிப்பிரதேச செயலளர் திருமி எஸ்.உஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com