Monday, January 30, 2012

கந்தரோடை கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பும்.

யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வித்தியாசாலை அதிபர் கா.சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண பாடசாலைகள் வேலைப்பகுதி பணிப்பாளர் க.குகநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வித்தியாசாலையின் ஸ்தாபகர் குடும்பம் சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். பொறியியலாளர் க.பிரகாஸ் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களின் பாட்டு, நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிராம மக்கள், பெற்றோர், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல்லினை யாழ் மேயர் அவர்களும் நாட்டிவைத்தமை சிறப்பம்சமாகும்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com