Wednesday, January 4, 2012

வாகன விபத்தில் பலியான யுவதியின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

பாதுகாப்பற்ற விதத்தில் கப்ரக வாகனத்தை செலுத்தி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதி , மரணத்தையும் படு காயத்தையும் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதியை நீர்கொழும்பு பொலிசார் நேற்று (3) கைது செய்துள்ளனர் ..

இந்த விபத்து சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) இரவு 8.30 மணியளவில் நீர்கொழும்பு தம்மிட்ட வீதியில் இடம்பெற்றுள்ளது .

கப்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய யுவதி மரணமாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

சம்பவத்தில் இறந்த யுவதியின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படட்டுள்ளது.

இளைஞர் படுகாயமடைந்த நிலையில் நிலையில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com