Wednesday, January 4, 2012

கருணா ஹோட்டலில் குத்தாட்டம். கனடா சென்றுள்ளாராம் என புலிகள் பூச்சாண்டி.

புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. புலிகள் எவ்வாறானா குணங்குறிகள் கொண்டவர்கள் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டும் கருணாவே. அதாவது தாம் வாழ்வதற்காக எந்த வேஷமும் புலிகள் போடுவார்கள், மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதே புலிகளின் குணாம்சம் என்பதற்கெல்லாம் கருணாவின் தற்போதைய செயற்பாடுகள் சான்று பகர்த்துவருகின்றது.

தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கு தகுந்த இடத்தினை வழங்கவேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்ப்புக்களின் மத்தியில் கருணாவிற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட பதவிகளை வைத்து தமிழ் மக்களுக்கு ஏதாவது சேவை செய்யவோம் என்ற எந்த சிந்தனையும் அற்றவராக கருணாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

கருணாவின் இச்செயற்பாடுகள் புலம்பெயர் புலிகளின் சதிகளுக்கும் விசமப்பிரச்சாரத்திற்கும் வாய்பினை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. ஓட்டுமொத்தத்தில் கருணா புலிகளுடன் ஒப்பந்த அடிப்படையிலேயே இவ்வாறு செயற்படுகின்றாரா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

இந்நிலையில் கருணா ஐரோப்பிய மற்றும் கனடா தேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் மக்களை பிரிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளாராம் என்ற பிரச்சாரம் ஒன்றை புலிகள் முன்னெடுக்கின்றனர். ஆனால் கருணாவோ கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் குத்தாட்டம் போடுகின்றார்.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்பதுபோல், புலிகள் தமது பின்னடைவுகளை மறைப்பதற்கும், தமது போட்டியாளர்கள் மீது அபாண்ட பழி சுமத்துவதற்கும் தற்போது கருணா , கே.பி போன்றோரை பயன்படுத்தி வருகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசை சிதைப்பதற்கு கருணா கனடா விஜயம் செய்துள்ளாராம் என்றுவேறு செய்தி பரப்புகின்றனர். அவ்வாறாயின் கருணா அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது இச்செய்தியை வெளியிட்டுள்ளோரின் கருத்தா?





xxxx

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com