Wednesday, January 4, 2012

நாளை முதல் யாழ். பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு பதிவு

யாழ்.குடாநாட்டு பொலிஸ் நிலையங்களில் இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்றத்திற்கான குற்றப்பத்திரிகை தமிழ் மொழியில் பதிவு செய்யப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி. இந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொதுமக்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியில் பதிவுகள் செய்யப்பட்டு வந்தன.

எனவே, யாழில் தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com