Tuesday, January 31, 2012

ஈரான் மீதான பொருளாதார தடையினால் சிறிய நாடுகள் பாதிப்பு -ஜனாதிபதி

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் இலங்கை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும், பொருளாதார தடையை ஏற்படுத்தியதன் பின்னர் மாற்று நடவடிக்கைகள் அவசியமாகிறது.

இந்தியாவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஅங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com