Tuesday, January 31, 2012

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்க மறுப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராவதற்கு எழுந்த எதிர்ப்பை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபரான துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராக முடியாது என இன்று தீர்ப்பளித்துள்ளார்.

முல்லேரியா சம்பவம் குறித்த அனைத்து விசாரணை அறிக்கைகளும் சட்ட மா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டு அவருடைய ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் துமிந்த சில்வாவை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபர் இன்னும் தமக்கு ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துளளனர்

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.காமினி என்பவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணி கேட்டுக் கொண்ட போதும் இரகசிய பொலிஸார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனால் பிணை வழங்க மறுத்த நீதவான் முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com