Wednesday, December 21, 2011

கருவின் அறையைக் கோருகின்றார் சஜித்.

கரு ஜயசூரியவின் பாராளுமன்ற அறையை கோரி சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமைத்துவத்திற்கு போட்டியிட்டு பிரதி தலைமைத்துவத்தையும் இழந்துள்ள கருஜயசூரியவுக்கு, பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தினால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அறையும் அகற்றப்பட்டுள்ளது. கரு ஜயசூரியவை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன்,அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ அறை சீல் வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரு ஜயசூரியவுக்கு ஒதுக்கப்படடிருந்த உத்தியோகபூர்வ அறையை தனக்கு பெற்றுத்தருமாறு பிரதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரு ஜயசூரிய உத்தியோகபூர்வ அறையிலிருந்து வெளியேறிய போதிலும், அவர் பயன்படுத்திய பொருட்கள் உத்தியோகபூர்வ அறையிலிருந்து அகற்றப்படவில்லை. இதனால் சஜித் பிரேமதாசவின் கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அங்கீகாரம் கிடைத்தவுடன் சஜித் பிரேமதாசவுக்கு குறித்த உத்தியோகபூர்வ அறையை வழங்க தயாரென்றும் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.



.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com