Wednesday, December 21, 2011

பேரா. பல்கலைக்கழக மாணவர் சங்கம் உட்பட சகல அமைப்புக்ளுக்கும் தடை உத்தரவு.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் உட்பட சகல பீடங்களின் மாணவர் அமைப்புகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர் சங்கம் உட்பட சகல பீடங்களிலும் செயற்பட்ட மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழகத்தின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாக உபவேந்தர் ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர் சமூகம் பாதுகாப்பற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும், இந்த மாணவர் அமைப்புகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விடயங்களை அடிப்படையாகக கொண்டு, மாணவர் அமைப்புகள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக, பேராதனை பல்கழைகக்கான துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை. பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல், விஞ்ஞான கல்வி பீடத்தின் பேராசிரியர் சாந்த ஹென்னாயக்க மீது, மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக, பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com