Friday, December 16, 2011

தொழில் வாண்மையிலான உளச்சமூகப்பணி நிறுவகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழில் வாண்மையிலான உளச்சமூகப்பணி நிறுவகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவந்த பல்வேறு பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வாழைச்சேனை,கரடியனாறு,மகாஓயா,மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

யுஸ் எய்ட் நிதியுதவியுடன் இடம்பெற்றுவரும் இந்த பயிற்சி நெறியில் அரச,அரசசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுவோர்,யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பாடசாலை கல்வியை முடித்தோர் ஆகியோர் பங்குகொண்டு பயிற்சிபெற்றனர்.

உளவியல் மற்றும் சமூகங்களிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்புதல் போன்ற பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com