Friday, December 16, 2011

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில்

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேற்படி இலங்கையர்கள் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விமானமொன்றில் நாடுகடத்தப்பட்டனர்.

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமானநிலையத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் மீது கட்டுநாயக்க விமானநிலைய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை,வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com