ஆப்கனில் பள்ளிவாயல் தொழுகையின்போது தற்கொலைத் தாக்குதல்! 54 பேர் பலி!
ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று நடந்த இரு வேறு தற்கொலை தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காபூலில் உள்ள மசூதி ஒன்றில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது தற்கொலை படையை சேர்ந்த ஒருவன் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இதே போன்ற சம்பவம் நகரின் வடக்கு பகுதி ஒன்றிலும் நடந்தது. இந்த இரு சம்பவங்களிலும் 54 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment