Wednesday, November 30, 2011

தெற்கிலிருந்து மலையகத்திற்கு நகருதாம் ஜேவிபி யின் குமார் அணி. புலனாய்வுப் பிரிவு

ஜே.வீ.பீ இன் குமார் அணி தனது அதிகாரத்தை தெற் பகுதியிலிருந்து மலையகத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பதுளை, பண்டாரவளை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தமது அதிகாரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்பகுதிகளில் அரசியல் தொடர்பான வகுப்புக்களை நடத்தி வருவதாகவும், புலனாய்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமையில் அவ்வணியின் புலப்படா தலைவரான பிரேம் குமார் குணரத்னம் மலையகத்தில் மறைந்திருப்பதாகவும், அத்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கை கேந்திரமாகக் கொண்டு அதிகாரத்தை பரவலாக்க அவ்வணி முயற்சித்த போதிலும், அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் அரசியல் அதிகாரம் பலமாக இருப்பதாலும், எதிர்காலத்தில் ஏற்படலாம் என அவர்கள் எதிர்பார்க்கும் அரச விரோத செயற்பாடுகளின் போது மலையக இளைஞர் யுவதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டின் மத்தியில் நிலைகொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதி, குமார் அணி இவ்வாறு மலையகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

இதேநேரம் அவ்வணி பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாண இளைஞர் யுவதிகளையும் தமது அணியில் இணைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டு விஷேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. புலிகளின் ஆயுத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளை சந்திப்பதற்கும் இவ்வணி முயற்சித்து வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com