Wednesday, November 30, 2011

கடுகதி வீதியில் பஸ் சேவை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு. இதுவரை 36 விபத்துக்கள்!

தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.

இந்தப் பயிற்சி இ.போ.ச தலைமையக பயிற்சிக் கல்லூரியில் தற்போது வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் கடுகதி வீதியிலுள்ள விஷேட வீதி மற்றும் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாக பொலிசாரினால் வழங்கப்படும் மற்றொரு பயிற்சியின் பின்னர் பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும்.

கொட்டாவையிலிருந்து காலி வரை இந்த பஸ் வண்டிகளில் கட்டணம் 380 ரூபாவாகும்.

கடுகதி வீதியில் இதுவரை பாரிய இரண்டு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதன் முதலாவது விபத்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினால் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது விபத்து மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தியமையினால் ஏற்பட்டுள்ளது. இதுதவிர 36 சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com