Wednesday, November 30, 2011

மைக்கேல் ஜாக்சன் மரணம்: டாக்டருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை !

மைக்கேல் ஜாக்சன் மரணத்துக்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற பாப்பாடகர் மைக்கேல் ஜாக் சன் (50) கடந்த 2009-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடந்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதி மைக்கேல் பாஸ்டர் தீர்ப்பு கூறினார். அப்போது டாக்டர் முர்ரே அரக்க தனமாகவும், சைத்தான் போன்றும் செயல் பட்டுள்ளார். இவர் ஒருமனி தரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளார். எனவே அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி டாக்டர் கான்ராடு முர்ரே குற்றவாளி. அவர் கொடுத்த அதிகசக்தி வாய்ந்த மாத்திரை தான் மைக்கேல் ஜாக்சனின் உயிரை பறித்தது. எனவே அவர் ஒரு கொலை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதற்கிடையே, மரணம் அடைந்த மைக்கேல் ஜாக் சன் குழந்தைகளுக்கும், அவர் நடத்திய எஸ்டேட் நிறுவனத் துக்கும் டாக்டர், முர்ரே ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான விசார ணைக்கு வருகிற ஜனவரி 23-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் முர்ரே டாக்டர் தொழில் செய்ய நிரந்தமாக தடை விதிப்பது குறித்தும் அப்போது தெரிய வரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com