Wednesday, November 30, 2011

சரத் பொன்சேகாவை விடுவிக்ககோரி இலங்கையை மிரட்டுகின்றது அமெரிக்கா!

சிறை வாசம் அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பென்சேக்காவை விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுமென ஐக்கிய அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அமெரிக்க தூதுவர் பெட்ரீஷியா முட்டேனிசை சந்திக்க சென்ற போதே அமெரிக்க தூதரக அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவர் கலந்து கொள்ளவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் தூதரகத்தில் இருந்த உயர் அமெரிக்க ராஜதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com