Wednesday, November 30, 2011

2 உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டிலுள்ள 23 உள்ளுராட்சி சபைகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆணையாளரிடம் சொத்து விபரங்களை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. சொத்து விபரங்களை வழங்குவது தொடர்பாக சகல வேட்பாளர்கள், குழுத்தலைவர்கள், அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக ஊடகங்கள் மூலம் பரந்தளவிலான பிரசாரங்களும் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், குறித்த தினத்திற்கு முன்னர் சொத்து விபரங்களை வழங்க தவறிய 2 வேட்பாளர்களுக்கு எதிராக சடட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவு செய்யப்பட்ட நதில் துஷாந்த மாலகொட மற்றும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட அமீர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com