இவ்வருட முதல் ஆறுமாத காலப்பகுதியில் 4737 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் யூன் மாதம் வரையான காலப்பகுதியில் 4737 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் என்றும், நடைபாதைகளில் சென்ற பாதசாரிகளே அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் போக்கு வரத்து பிரதியமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார் .
முதல் ஆறு மாதகாலப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 364 பயங்கர விபத்துக்களாகும் என்றும், மத்திய தர விபத்துக்கள் 1138 ஏற்பட்டுள்ளன என்றும், சிறிய காயங்களுடன் 2173 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment