Wednesday, November 9, 2011

கிம்புலாப்பிட்டிய ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் மரணம்

நீர்கொழும்பு- கிம்புலாப்பிட்டிய ஆற்றில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபகரமாக மரணமாகியுள்ளான். சும்பவத்தில் இறந்தவன் கதிராணை கோல்டன் எவன் வத்தை பிரதேசத்தை சேர்ந்த

இவர் போலவலான பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கற்பவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் குடும்பத்தில் மூத்தவனாவான். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். தந்தை நகர சபையில் வேலை செய்பவராவார். தாயார் குடும்பத்தை பிரிந்து சென்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் மூன்று சிறுவர்களும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்துள்ளனர்.திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தில் மரணமான சிறுவன் இரு சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு கிம்புலாப்பிட்டிய ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளான். அண்ணன் மாத்திரமே குளித்துள்ளான். இதன்போதே திடீரென்று ஆற்றில் மூழ்கி சிறுவன் பலியாகியுள்ளான்.

சிறுவனின் மரணச் சடங்கு அன்று மாலை இடம் பெற்றது.

செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com