Thursday, November 10, 2011

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை. வவுனியாவில் நிகழ்வு

பயங்கரவாதம் காரணமாக இந்தியாவிற்கு தப்பிச்சென்று, மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு, பிரஜா உரிமைகளை வழங்கும் வைபவம், வவுனியாவில் இடம்பெற்றது. எல்ரிரிஈ யிடமிருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக, பலர், கடந்த காலங்களில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை இல்லாததன் காரணமாக, பாடசாலைகளில் அனுமதிப்பது உட்பட பிறப்பு சான்றிதழ்கள், அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதிலும், சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com