Tuesday, October 18, 2011

நாட்டுக்கு எதிரான சவால்களை தோற்கடிக்க முடிந்ததாக ஜி.எல்.பீரீஸ் குறிப்பிடுகிறார்

ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட பாரிய சவால்களை தோற்கடிக்க முடிந்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக பாரிய சவால் விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பலம்வாய்ந்த சில நாடுகள் விடுப்பதற்கு தயாரான சவாலை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் தோற்கடிக்க முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com