Friday, October 14, 2011

துமிந்தசில்வாவின் மூளையில் பாதிப்பு: கண்பார்வை பாதிப்பில்லை

முல்லேரியாவில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைவட்டாரம் தெரிவித்துள்ளது

இதேவேளை,கண்களுக்கோ கண்பார்வைக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மண்டையோட்டில் துப்பாக்கிச் சன்னம் இருக்கின்றமையால் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com