Thursday, September 29, 2011

யாசகர்களை கொலை செய்யும் திட்டம்.

இரவு வேளையில் தெரு மருங்குகளில் தங்கியிருக்கும் அநாதவரானன நபர்களின் தலைகளைத் தாக்கி கொலை செய்யும் அராஜக திட்டம் ஒன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் தங்கியிருந்த அநாதவரான நபர்கள் மற்றும் யாசகர்கள் 20 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எந்த வித சாட்சியங்களும் இன்றி இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு புலனாய்வுப் பிரிவினர் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பிச்சை எடுத்து வைத்திருக்கும் பொட்டலங்களுடன் தெருவோரங்களில் படுத்துறங்குகின்றபோது இப்பொட்டலங்களை இலக்குவைத்தே இக்கொலைகள் இடமபெறுவதாக நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com