Thursday, September 29, 2011

மூலைமுடுக்கெங்கும் நுழைந்து வெளியேறியுள்ள பிளேக், உதுலையும் சந்தித்தாராம்.

அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் தலைவரான உதுல் பிரேமரத்ன, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளதாக அரச புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் காணாமல் போன தமிழ் மக்கள் சார்பாக என்று கூறி மக்கள் விடுலை முன்னணியினரால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்றும் அவை அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தெரிய வந்துள்ளது.

இது எதை விளக்குகின்றதாயின் அமெரிக்கா இலங்கையின் மூலை முடுக்கு எங்கும் நுழைந்து தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள முனைகின்றது என்பதையாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ தங்களை அவர் சந்திக்கின்றபோது தமிழீழம் வாங்கித்தரப்போகின்றார் என்கின்றார்கள். அவ்வாறாயின் உதுலை சந்தித்தது சிங்கள ஈழம் வாங்கி கொடுக்கவா என்ற கேள்வி எழுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com