Thursday, September 29, 2011

இலங்கையில் வருடாந்தம் இரண்டரை இலட்சம் கருக்கலைப்பு சம்பவம்கள்!

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கருக்கலைப்பு சம்பவம்கள் இலங்கையில் வருடம்தோறும் இடம்பெற்று வருவதாக குடும்ப சுகாதார பணியகம் குறிப்பிட்டுள்ளது குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர் டாக்டர் கபில ஜயரட்ன இது குறித்து மேலும் கூறியதாவது நாளொன்றுக்கு 900 கருக்கலைப்பு சம்பவம்கள் இடம்பெறுகின்றன. வருடம்தோறும் இடம்பெறும் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் பிறப்பு நிகழ்வுகளில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கருக்கலைப்பு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

திருமணம் முடித்த 92 வீதமான பெண்களிடையேயும் 8 வீதமான திருமணம்
செய்யாத பெண்களிடைNயும் இக்கருக்கலைப்பு சம்பவம்கள் இடம்பெறுவதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 27 வீதமான பெண்கள் கருக்கலைப்புக்கு உட்படுகின்றனர் இவற்றை தவிர்க்கும் முகமாக பல்வேறு குடும்பதிட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தொடர்பான அறிவூட்டும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையில் கருக்கலைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாத போதிலும் அதை கட்டாயமானதாக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com