Thursday, September 29, 2011

கற்பிணித்தாய்மாரின் தொழில் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு!

(புதிய ஆய்வுத்தகவல்)
கற்பிணிப் பெண்கள் பணியாற்றும் தொழில் காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 7 வயதான 43.000 சிறுவர்களது ஆரோக்கியம் தொடர்பில் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் கற்பத்தில் இருக்கும்போது அவர்களது தாய்மார்கள் எங்கு பணியாற்றினர் என்பதை கண்டறிய ஆய்வை மேற்கொண்டனர் வாகனப் பாகங்கள், மரத்தளபாடங்கள் , காலணிகள் ஒட்டுப்பசைகள், வர்ணப்பூச்சு என்பன சம்பந்தமான தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு

ஏனைய தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் இருமடங்கு அதிகமாக உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது தாய்மாரின் வயது, நிறை, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் மிருகங்களுடன் பழகும் நிலை என்பன தொடர்பிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ப்பட்டது.

மேற்படி ஆய்வின் முடிவுகள் நெதாலாந்தின் தலைநகரில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற சுவாச சம்பந்தமான சபையின் வருடாந்த மாநாட்டில் சமர்பிக்கப்பட்டன.

எனினும் தொழிற்சாலைகளில் சிறந்த காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தியிருப்பது ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானியாவில் ஆஸ்துமா நோயால் 5 மில்லியன்பேர் பாதிக்கப்பட்டுளள்னர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com