Saturday, August 13, 2011

வாழைச்சேனை புகையிர நிலையத்தில் மர்ம மனிதன் கைது

வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராம புகையிரத நிலையத்தில் நேற்று இரவு; நடமாடிய ஒருவரை 'மர்ம மனிதன்' என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அடையாளம் காட்டியதனை அடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நடமாடிய மர்ம மனிதன் என சந்தேகிக்கப்பட்ட நபரை ஒருவரை பொதுமக்கள் இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர்
நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்ற பொலிஸார்; குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை ஏற்பட்டது.
நிருபர்-ஜீனைட்.எம்.பஹத்

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com