Saturday, August 13, 2011

நடிகை ருக்மணி தேவியின் கல்லறை இனந் தெரியாத நபர்களால் நாசம்

மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட சிலை இனந் தெரியாத நபர்களால் வெள்ளிக் கிழமை முற்பகல் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.
அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு ஏத்துக்காலயில்உள்ள பொது மயான பூமிக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் ருக்மணி தேவியின் கல்லறை சிலை ருக்மணி தேவி நடித்ததிரைப்படங்களின் பெயர் பட்டியல் உட்பட அவரது வாழ்க்கை குறிப்பு பொறிக்கப்பட்ட பெயர் படிகம் கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டவேலி என்பவற்றை உடைத்து நாசம்செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நீரகொழும்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு நகர முன்னாள் மேயரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த முனசிங்க ஆவார்.ஏனைய சந்தேக நபர்கள் அவரிடம் பணியாற்றுபவர்கள்என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு நிருபர்





.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com