Sunday, August 14, 2011

9ஆயிரம் இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு

2011ம் ஆண்டு கொரிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் இலங்கையர்கள் தென்கொரியாவில் நேரடி வேலை வாய்ப்பினை பெறுவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புபணியகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த வாரம் 50 ஆயிரத்து 930 விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்த பணியகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியாக இதற்குரிய பரிட்சைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளது
இதற்கமைற தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 1 லட்சம் முதல் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை வேதனம் வழங்கப்படுவதுடன் மேலும் பல சலுகைகளும் வழங்கப்படும் என பணியகத்தின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொரிய வேலைவாய்ப்பை பெற்றுச் செல்லும் முதலாவது குழு, அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் அங்கு செல்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.



.......

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com