Wednesday, July 20, 2011

கருணாவின் செயலாளாரின் வீட்டில் ஆயுதம் தேடி பொலிஸார் சோதனை.

பிரதி அமைச்சர் முரளிதரனின் பிரத்தியேக செயலாளரான ரவி யின் வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு ஆயுதங்கள் தேடி பூரண பரிசோதனை ஒன்றைச் செய்ததாக தெரியவருகின்றது. ரவி ஒரு ஆசிரியர் ஆவார். இவர் தற்போது கருணாவின் பிரத்தியேக செயலாளராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவரது வீட்டில் பரிசோதனை செய்த பொலிஸார் அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை கையளிக்கவேண்டும் என புதிய காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தமது சோதனை நடவடிக்கைகளை முடுக்கி விட்டள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளியக்கம் அழிக்கப்பட்டு நிலைமைகள் வழமைக்கு திரும்பியிருந்தாலும் ஆயுதக்குழுக்களிடம் இருக்கக்கூடும் என நம்பப்படும் இவ்வாயுதங்களினால் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சம் காணப்படவே செய்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com