Sunday, October 17, 2010

வான் வழி தாக்குதல் நடத்துவோம் : கருணாநிதிக்கு குறுந்தகவல் (SMS) வழி மிரட்டல்.

சென்னை தமிழக முதல்வர் கருணாநிதிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் வீட்டின் மீது வான் வழி தாக்குதல் நடத்துவோம் என்று இந்த குறுந்தகவல் வழியிலான மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிக்கு ஏற்கனவே இரண்டு முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அவரது தனிப்பிரிவு அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வழி ஒரு மிரட்டலும், தபால் வழி மற்றொரு மிரட்டல் கடிதமும் அண்மையில் வந்திருந்தன. இதுகுறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது குறுந்தகவல் வழியும் புதிய மிரட்டல் வந்திருக்கிறது. சென்னை போக்குவரத்து போலிஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு கைபேசி இணைப்புக்கு இந்த மிரட்டல் குறுந்தகவல் வந்தது. அதில் சென்னை யில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டின் மீது வான் வழி குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த மிரட்டலை அனுப்பியது யார் என்பது தெரியவில்லை. எனினும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துவோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com