Sunday, October 17, 2010

மன்னாரில் பஸ் எரிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் தோட்டவெளி புனித வேதசாட்சி ஆலையத்திற்கு முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று நேற்று(16-10-10)அதிகாலை 1-45மனியளவில் இனம் தெரியாத நபர்களினால் தீமூட்டப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மன்னாரில் இருந்து சிலாபத்துறை ஊடாக புத்தளம் பகுதிக்கு போக்குவரத்துச் சேவையினை மேற்கொன்டு வந்துள்ளதாகவும் சில தினங்களாக சேவையில் ஈடுபடாமல் அங்கேயே தரித்து நின்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. யார் எதற்காக தீ வைத்தார்கள் என்பது தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொன்டு வருகின்றனர். பஸ்வண்டி மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த அல்பிரட் அன்ரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவருகின்றது.


(மன்னார் நிருபர் லெமபட்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com