Monday, October 4, 2010

பொன்சேகா சிறையில் விசமூட்டி கொல்லப்படலாம். கரு ஜெயசூரியா

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைச்சாலை சென்று பார்வையிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஜெனரல் பொன்சேகா சிறைச்சாலையில் விசமூட்டிக் கொலை செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள இராணுவத் தளபதியை பார்iவிட்டதன் பின்னர் வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவசரவசரமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலை பயிற்சிப் பெற்றவர்கள் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சில வேளைகளில் உணவில் விஷம் வைத்து சரத் பொன்சேகாவை கொலை செய்ய சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com