Saturday, September 18, 2010

கறடியனாறு பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் ஆயித்தியமலையில். ஐஜிபி

நேற்று இடம்பெற்ற வெடிவிபத்தினால் கறடியனாறு பொலிஸ் நிலையம் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் யாவும் ஆயித்தியமலை பொலிஸ் நிர்வாகத்தினால் தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் கரடியனாறு பொலிஸ் நிலையம் விரைவில் மீண்டும் கடமைகளில் ஈடுபடும் எனவும் வெடிப்புச் சம்பவத்தில் 12 பொலிஸாரும் 2 சீனநாட்டவர்களும் 7 பொதுமக்கள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 என இராணுவப் பேச்சாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com