Friday, September 24, 2010

அரசாங்கத்தை கவிழ்க்க முற்பட்ட இராணுவ உயரதிகாரிகள் விடுதலை.

முன்னாள் இராணுவத் தளபதியுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கவிழ்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல்கள் , பிரிகேடியர் , ஊடகவியலாளர் ஒருவர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமது கைது சட்டவிரோதமானது என அவர்கள் தனித்தனியே செய்த அடிப்படை மீறல் வழக்குகள் விசாரணைக்கு வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்குதாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் பிரிகேடியர் துமிந்த கப்பெட்டிவலன, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான சுனில் அமரசேன டி சில்வா, உபாலி உதயங்கன மற்றும் ஊடகவியலாளர் றுவான் வீரகோன் ஆவர்.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிரான முதலாவது இராணுவக் குற்றவியல் நீதிமன்று அவரை குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவ்வழக்கில் மேற்படி ஊடகவியலாளரின் தொலைபேசியில் சேவையிலிருந்தவண்ணம் அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணினார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இதே இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் , ஜெனரல் பொன்சேகா தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com