Sunday, August 29, 2010

மனித உரிமைகள் ஸ்தாபனமொன்றைச் சேர்ந்த மேலுமொருவர் நாட்டை விட்டு வெளியேற்றம்.

மனித உரிமைகள் மற்றும் ஊடக உரிமைகளை பாதுகாக்கும் அரச சார்பற்ற நிறுவனமான Non Violent Peace Force எனும் அமைப்பின் இலங்கை கிளைக்கான அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30.08.2010 திகதி க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினர் உத்தரவிட்டுள்ளனர். கெண்ணிய நாட்டைச்சேர்ந்த செல்வி. எலிசபத் எனப்படும் இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கையில் பணிபுரிந்து வருகின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் , மேற்படி ஸ்தாபனத்தில் கடமை புரியும் அனைவரதும் விபரங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com