Sunday, August 15, 2010

மகாராஜா பறையன். அவனுக்கு மீண்டுமொரு பாடம் புகட்டவுள்ளளேன். மேர்வின்.

சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் மகாராஜா ஓர் பறையன் எனவும் அவருக்கு மீண்டுமொருமுறை பாடம்புகட்டவுள்ளதாகவும் முன்னைநாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி பறிபோன பின்னர் களனிய பிரதேசத்திற்கு சென்றிருந்த அவர் அங்கு ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் தனது பதவி பறிபோனாலும் தான் மக்களிடமிருந்து அந்நியப்படவோ அன்றில் மக்கள் சேவையை நிறுத்திக்கொள்ளவோ இல்லை தெரிவித்துதடன் தான் அமைச்சுப்பதவியிருந்து நீக்கப்பட்டதான செய்தியை சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக தொலை க்காட்சிகள் ஒளி பரப்பியதாகவும் , அவற்றில் தான் ரூபவாகினி தொலை க்காட்சி ஊழியர்களிடம் அடிவாங்கிய காட்சிகளும் காண்பிக்கபட்டதாகவும் கூறிய அவர் அவற்றை தெரண போன்ற ஊடகங்கள் ஒளிபரப்பியமையே கவலை தருவதாகவும் , மகாராஜாவின் நிறுவனங்கள் ஒளிபரப்பியதையிட்டு கவலை இல்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் இவ்வூடகங்களுக்கு வேண்டுமானல் தான் சிறுவயதில் நிர்வாணமாக நின்ற படங்களும் உண்டெனவும் அவற்றையும் பிரசுரிக்குமாறும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com