Sunday, August 8, 2010

கிளிநொச்சியிலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம் குடும்பங்களின் காணிகள் ஆக்கிரமிப்பு.

கிளிநொச்சி முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டு இன்னும் புத்தள நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி முஸ்லிம்களுடைய காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களின் காணிகள் முன்னாள் புலிகளினால் ஆகிரமிக்கபடுள்ளது. இவற்றை பெற்று கொடுக்க பொலிசாரும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரமான ஹகீம் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் , கிளிநொச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 1750 முஸ்லிம் குடும்பங்கள் புத்தளத்தில் அமைத்துள்ள நலன்புரி முகாம்களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்ந்து வந்த நாச்சிக்குடா பிரதேசம் மற்றவர்களினால் ஆக்கிரமிக்கபடுள்ளது. இதனால் இவர்கள் தமது சொந்த இடத்துக்கு மீள சென்று மீள்குடியேற முடியதுள்ளது, பறிபோன அவர்களின் இடங்களை மீள பெற்றுகொடுக்க அரசாங்கம் எந்த நடவடி கைகளையும் எடுக்க வில்லை. இவர்களின் பெருமளவு நிலங்கள் முன்னாள் புலிகளினால் அபகரிக்கபடுள்ளது. அவர்கள் தற்போது அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். விரிவாக இவர்களுக்கு எதிராக பாதிக்கபட்ட மக்கள் குரல் கொடுக்க தயங்குகின்றனர். இவர்களினால் தமக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்கள் தமது ஆயுதங்கள் எங்கேயாவது மறைத்து வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் 'Pநழிடந யசந ளஉயசநன வழ வயடம யபயiளெவ வாநஅ. வுhநளந கழசஅநச டுவுவுநு உயனசநள அiபாவ hயஎந hனைனநn வாநசை யசஅள நடளநறாநசந,'-இது போன்ற பிரச்சனைகள் வடமாகாணத்தில் பல பகுதிகளில் காணக்கூடியதாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதே நேரம் அன்று பாராளுமன்றில் பேசிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'வடக்கில் 1981 ஆம் ஆண்டு 12 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அவ்விடங்களில் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆவணங்களுடன் வருவார்களேயானால் அவ்விடங்களில் அவர்களை குடியேற்றுவோம். இதனை யாரும் தடுக்க முடியாது' என உறிதிபடத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com