அமெரிக்க படையினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்: அல் கொய்தா அழைப்பு
ஈரான், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர் தொடுக்க வேண்டும் என்று அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இணைதளம் ஒன்றில் வீடியோ காட்சியில் தோன்றும் அல் கொய்தா தளபதி அன்வர், அமெரிக்கர்களை எதிர்க்க வேண்டியது இஸ்லாமியர்களின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
அவர்களை கொள்கை ரீதியிலாக எதிர்கொள்வதுடன் உடல் ரீதியாகவும் துன்புறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 அமெரிக்க இராணுவ வீரர்களை கொலை சென்றவர் ஹட்சன் தனது மாணவன் என்று குறிப்பிட்டுள்ள அன்வர், அந்த நிகழ்வை எண்ணி தாம் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஆப்கானிஸ்தானில் அயல்நாடு இராணுவ வீரரை கொன்றால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வன்முறையை கைவிட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பும் தீவிரவாதிகளின் மறு வாழ்வுக்கு பணம் வழங்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி நல்வழிக்கு திரும்ப ஒரு சிலர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர்களோ அவர்களின் மனநிலையை வேறு வழிக்கு திருப்பி விடுகின்றனர். அதாவது, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அயல்நாட்டு இராணுவ வீரர்களை அவர்கள் கொலை செய்யவேண்டும். அவ்வாறு கொலை செய்யப்படும் இராணுவ வீரர்களின் தலைக்கு தலா ரூ.2 லட்சம் பாகிஸ்தானிய பணம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நேட்டோ தளம் மீது தாலிபான்கள் தாக்குதல்
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன்தினமிரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment